குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்:
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் (நல்வினை, தீவினை) சேர்வதில்லை.
இறைவனின் திருவடிப் பெருமையினைக் கூறும் பல குறள்களுள் இதுவும் ஒன்று. விதிவசத்தால் மாந்தர் வாழ்வில் நன்மையும் தீமையும் நடப்பது இயல்பே ஆகும். புறநானூற்றில் வரும் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்னும் பாடல் (எண்: 192) இக் கருத்தினையே ஆதரிக்கிறது. வள்ளுவரும் இந்த விதியினைப் பற்றி 'ஊழ்' என்னும் அதிகாரத்தில் விரிவாகக் கூறியுள்ளார். உயர்ந்த நிலையில் உள்ளோரைக் கீழ்நிலைக்கும் கீழ்நிலையில் உள்ளோரை உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும் வல்லமை படைத்த இந்த விதியானது பிறரால் அறிய முடியாதது ஆகும். நன்மையும் தீமையும் நமக்கு அருகில் தான் மறைந்து உள்ளது விதியின் வடிவத்தில். அண்டவெளி எங்கும் இருளே நிறைந்திருப்பது போல விதியானது எல்லா இடங்களிலும் மறைந்தே இருப்பதால் விதியினை இருள் என்று உருவகப் படுத்திக் கூறுகிறார்.
விதியினை இருளாக உருவகப் படுத்திக் கூறிய வள்ளுவர் அதனை வெல்லும் வலிமை கொண்ட இறைவனின் திருவடிகளைப் பொருளாக உருவகப் படுத்திக் கூறுகிறார். இனி வள்ளுவர் கூற வரும் பொருள் இது தான்: 'இறைவன் தரும் பொருளாகிய திருவடிகளைச் சேர்ந்து சரணடைந்தவர்களிடத்து இருள் ஆகிய விதி தருகின்ற நன்மையும் தீமையும் சேர்வதில்லை.
No comments:
Post a Comment