குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை.
வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் (ஞானி) என்ற பொருளும் உண்டு. நிறைய கற்றவர் கடவுளுக்கு ஒப்பாக போற்றப்படுவர். ஆகையால் அவரை வணங்குதல், கடவுளை வணங்குவதற்கு சமம்
கதை:
ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார்.
நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும் பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்)
குரு மனம் கலங்கி வீட்டில் உட்காந்திருக்கிறார்.
அவருடைய மனைவி: ஏன் இப்படி கவலையுடன் உள்ளீர்கள்?
குரு: நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், என் மாணவனோ இளைஞன், எனக்கோ வயதாகி விட்டது என்னால் அவனை வெற்றிபெற முடியாது என்றார்.
அவருடைய மனைவி: கையில் ஒரு கரண்டியை கொடுத்து இப்போது போங்கள், அந்த மாணவனை தைரியமாக சண்டைக்கு கூப்பிடுங்கள் என்றாராம். குருவும் அவ்வாறே செய்தாராம்.
சண்டைகளத்தில்: குரு தன்னுடைய மாணவனை பார்த்து சொன்னாராம், நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், ஆனால் இந்த வித்தையை மற்றும் கற்று கொடுக்கவில்லை என்றார் (உண்மையில் அவருக்கு கரண்டியை வைத்து எந்த சண்டையும் தெரியாது, தன்னுடைய மாணவனின் கர்வத்தை நீக்கவே இந்த ஏற்பாடு)
மாணவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் கற்றுவிட்டேன் என்ற இறுமாப்பு என் கண்ணை மறைத்து விட்டது. என்னுடைய குருவே நான் சண்டைக்கு அழைத்தது பெரும் தவறு என்று காலில் விழுந்துவிட்டான்.
No comments:
Post a Comment